டெல்லி சிறப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு மேலும் ஒருவரை கைது செய்தனர். இதில், இப்ராகிம் சையது (28) என்பவனை ரகசிய தகவலின் பேரில் கைது செய்த போலீசார், அவனிடம் தீவிர விசாரணை நடத்தியதில், இவன் இந்தியாவில் தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.