மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, மோடி கழுதையா? என கேட்டு அவரை தொடர்ந்து கடுமையாக சாடிவருகிறார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடியை மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பொதுக்கூட்டங்களில் கடுமையாக திட்டி பேசி வருகிறார்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், மோடி இங்குள்ள மக்களை வெளியேற்றவேண்டுமென பேசிவருகிறார். மக்கள் மத்தியில் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டி கலவரத்தை ஏற்படுத்த திட்டமிடும் மோடிக்கு நாட்டின் பிரதமராவதற்கு எந்த தகுதியும் இல்லை.