அரசியல் யோகா - ஆஹா காங்கிரஸ்

வியாழன், 23 ஜூன் 2016 (16:05 IST)
சர்வதேச யோகா தினம் மூலம் அரசியல் ஆதாயம் தேட நரேந்திர மோடி முயற்சி செய்கிறார் என காங்கிரஸ் கட்சி விளாசிதள்ளியுள்ளது.
 

 
இது குறித்து, நியூடெல்லியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், யோகா என்பது மனித வாழ்விற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதை அமைதியாக, எளிமையாக செய்ய வேண்டும். அப்போது தான் அதன் பலன் நமக்கு கிடைக்கும்.
 
இதற்காக, பல கோடி ரூபாய் செலவு செய்து மோடி அரசு விளம்பரம் செய்துள்ளது. இது போஎன்ற மலிவான விளம்பரம் மூலம் மோடி மக்களை ஏமாற்றப் பார்கிறது என்று குற்றம் சாட்டினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்