பாகிஸ்தான் தூதருடன் பிட்சா, பர்கர், காபி என்று பேசியவர் கைது

திங்கள், 31 அக்டோபர் 2016 (15:06 IST)
உத்திரபிரதேச அமைச்சர் முனாவர் சலீமின் உதவியாளர் ஃபராஹத் என்பவர் பாகிஸ்தான் தூதருடன் கோடு வார்த்தைகள் மூலம் பேசியதாக கூறப்படுகிறது.


 

 
அண்மையில் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்தார் என்று மெஹமூத் அக்தர் என்பவர் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருடன் உத்திரபிரதேச அமைச்சர் உதவியாளர் ஃபராஹத் கோடு வார்த்தைகள் மூலம் தொடர்பு வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது:-
 
அவர் பிட்சா, பர்கர், காபி ஆகிய வார்த்தைகளை கோடு வார்த்தைகளாக பயன்படுத்தி தொடர்பு கொண்டதாக தெரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்