தென்மேற்கு பருவமழை: எந்தெந்த மாநிலங்களில் கனமழை?

புதன், 8 ஜூன் 2022 (19:02 IST)
ஜூன் 15ஆம் தேதி முதல் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாகவும் இதனால் இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக வெயில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஜூன் 10ஆம் தேதி முதல் பஞ்சாப் ராஜஸ்தான் ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் தென்மேற்கு பருவமழைக்கான சூழல் உள்ளது என்றும் ஜூன் 15ஆம் தேதி முதல் கிழக்கு மாநிலங்களில் பருவமழை தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
அதேபோல் தென்மேற்கு பருவமழை டெல்லியில் ஜூன் 27 அல்லது 28 ஆம் தேதிக்கு முன்னதாக தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்றும் அதன்பின் டெல்லியில் வெப்பம் படிப்படியாக பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்