இணையதளத்தில் சிறார் ஆபாசப் படங்களை பார்ப்பது, தரவிறக்கம் செய்வது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும். தணிக்கை செய்யப்பட்டு சான்றளிக்கப்படாத படங்களை பொது அரங்கில் காட்டுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஆனால் தனிமையில் வயதுவந்த ஒருவர், கணினியில் அவராக விரும்பி ஆபாசப் படங்களைப் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படாத நிலை இருக்கிறது என்று சென்னையில் இருந்து செயல்படும் சைபர் சோசைட்டி ஆப் இந்தியாவின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.