அவரை பத்திரமாக மீட்கும் பணியில் இந்திய அதிகாரிகள், ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். ஜூடித்தின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அவரை மீட்பதற்கு அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால், அங்கு செல்லும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் சமீபத்தில் எச்சரித்திருந்தது.