ஸ்கைஹாப் ஏவியேஷன் நிறுவனம் ஏப்ரல் 6 அன்று இந்த சாதனையை நிகழ்த்தியது. வழக்கமான விமானங்களுக்கு தேவைப்படும் நீண்ட ஓடுதளங்கள் இல்லாமல், நீர்ப்பரப்பிலிருந்தே இந்த விமானம் எளிதாக தரையிறங்கி மீண்டும் வானில் எழும்பியது.
முதற்கட்டமாக, லட்சத்தீவுகளில் உள்ள ஐந்து தீவுகளையும், இந்தியாவின் பிற பகுதிகளையும் இணைக்கும் வகையில் 19 இருக்கைகள் கொண்ட விமான சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தீவுகள், ஆறுகள் மற்றும் கடற்கரை பகுதிகளை அதிகம் கொண்டுள்ள இந்தியாவில், இந்த சேவை பயண நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் சுற்றுலா துறையிலும் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.