பகல்ஹாம் தாக்குதலுக்கு பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதாக இந்திய அரசு அறிவித்த நிலையில், அடுத்த கட்டமாக செனாப் நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் நீரையும் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
15 முதல் 20 ஏக்கர் அடி நீரை பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானுக்கு திருப்பி விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதால், பாகிஸ்தானின் ஆறுகள் தற்போது பாலைவனம் போல் காட்சி அளிக்கின்றன. அடிப்படை தேவையான குடிநீருக்கு கூட தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், செனாப் நதிநீரும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், செனாப்-ரவி-பியாஸ்-சட்லெஜ் இணை கால்வாய் திட்டத்துக்கான முன் நடைமுறை குறித்த ஆய்வை இந்தியா தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் கோடை காலத்தில் இருக்கும் நீர் தட்டுப்பாடு நிரந்தரமாக தீர்க்கப்படும் என்று தெரிகிறது.