இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் எல்லையை கொண்டிருக்கு நான்கு மாநில முதல்வர்களுடன் ராஜஸ்தானின் ஜெய்சல்மர் நகரில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி, குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி, பஞ்சாப் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் பங்கேற்றனர்.