உலக நாடுகள் முழுவதும் மக்கள் தொகை பெருக்கம் என்பது பெரும் கட்டுப்படுத்த வேண்டிய காரணியாக இருந்து வருகிறது. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருந்து வந்தது.
தற்போதைய நிலவரப்படி, இந்திய மக்கள் தொகை 142.8 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவை விட 50 லட்சம் மக்கள் இந்தியாவில் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகையில் 8.50 லட்சம் குறைந்துள்ளது.
2022 முதல் 2050க்குள் மக்கள் தொகை அதிகரிக்க உள்ள நாடுகளில் காங்கோ, எகிப்து, தான்சானியா, பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா வரிசையில் இந்தியாவும் உள்ளது.