இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பைச்சேர்ந்த மாணவர்கள், டெல்லியில் உள்ள மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இல்லத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது , அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியையும் கண்டித்தும் கோஷமிட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர், காவல்துறையின் தடுப்பை கடந்து செல்ல முயன்ற போது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.