அப்போது அவர் கூறுகையில், "லல்லு - நிதிஷ் கூட்டணியால் பீகாருக்கு எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. மாற்றத்தை பா.ஜ.க.வால் மட்டுமே அளிக்க முடியும். மதங்களின் பெயரில் அவர்கள் சமூகத்தை இரண்டாகப் பிரிக்கிறார்கள். தேர்தலில் லல்லு - நிதிஷ் கூட்டணி வெற்றி பெற்றால், காட்டாட்சி நடத்தும் காட்டுராஜாவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்துவிடும்.
பீகாரில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறும் என்பது தெளிவாக தெரிகிறது. எதிர்வரும் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். பீகாரில் லல்லுவும் நிதிஷ்குமாரும் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி உள்ளனர். ஆனால் இன்றளவும் பீகார் வளர்ச்சியில் பின்தங்கியே உள்ளது" . இவ்வாறு தெரிவித்தார்.