நாளை பிகார் மாநிலம் பாட்னா மற்றும் முசாபர்பூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவக்குகிறார். இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஸ்ரீபெரும்பத்தூரில் மனிதவெடிகுண்டு மூலம் கொலை செய்ததை போன்று பிரதமர் மோடியை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.