அதில் ராசிபுரம் எம்.பி. பி.ஆர். சுந்தரமும் ஒருவர். இவர் சமீபத்தில் தனது தொகுதியான ராசிபுரத்திற்கு வந்தார். அப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசும் போது “ எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுக ஒரு குடும்பத்தினரின் கையில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே நாங்கள் ஓ.பி.எஸ் அணிக்கு சென்றோம். எடப்பாடி பழனிச்சாமி பினாமி முதலமைச்சராக இருக்கிறார்.
கூவத்தூர் விடுதிக்கு சென்று குத்தாட்டம் போடுவதற்கும், உல்லாசமாக இருப்பதற்கும் மக்கள் எம்.எல்.ஏக்களுக்கு வாக்களிக்கவில்லை. அவர்கள் அங்கு என்ன லீலையில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு எவ்வளவு பணம் கை மாறப்பட்டது என்பது உட்பட அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. அதை விரைவில் வெளியிடுவேன்” என அவர் கூறினார்.