நான் சிறுபான்மையினருக்கு எதிரானவன் அல்ல: பிரவீன் தொகாடியா

வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (19:16 IST)
ஒடிசாவில் பதட்டம் நிறைந்த காந்தமால் மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பீரவீன் தொகாடியா பேசுவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்தது. இந்த நிலையில், தான் சிறுபான்மையினருக்கு எதிரானவன் அல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பீரவீன் தொகடியா கூறியதாவது:-

“நான் சிறுபான்மையினருக்கு எதிரானவன் கிடையாது. ஆனால் இந்து சமய சகோதர சகோதரிகளின் நலன்களுக்காக அவர்களுக்கு ஆதரவாக கண்டிப்பாக நான் பேசுவேன். இந்துக்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருக்கின்றனர். அவர்களுக்கு இலவசமாக சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும். அனைத்து இந்துக்களும் படித்தவர்களாக வேண்டும். அப்போதுதான் அவர்களால் பிறரின் உதவி இல்லாமல் வாழ முடியும். அனைத்து இந்துக்களுக்கும் உணவு இருக்க வேண்டும். அவற்றிற்காக நாம் அனைவரும் பணம் மற்றும் அன்பை நமது பங்களிப்பாக அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்