காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான நட்வர்சிங் ‘‘ஒன் லைப் இஸ் நாட் எனப்’’ என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் உள்ள தகவல்களை ஒவ்வொரு பகுதியாக வெளியிட்டு வருகிறார். முதல் நாள் வெளியிட்ட தகவலில் சோனியாவை பிரதமராக விடாமல் ராகுல் தான் தடுத்தார் என்று கூறியிருந்தார்.
நேற்று ராஜீவ் காந்தி இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பும் முடிவை அமைச்சரவை ஒப்புதல் பெறாமலேயே எடுத்தார் என்றும் இலங்கை தமிழர் பிரச்சனையை தவறாக கையாண்டதால் கொலை செய்யப்பட்டார் என்றும் கூறிய தகவல் வெளியிடப்பட்டது. அத்துடன் சோனியா தன்னை இழிவாக நடத்தினார். இது எந்த இந்தியனுக்கும் ஏற்படாத ஒன்று என்றும் நட்வர்சிங் குற்றம்சாற்றினார்.