திருப்பதி, சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டை வெட்டி கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது பற்றி சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி சிவில் உரிமைக் கழகமும், கொல்லப்பட்ட சசிகுமாரின் மனைவி முனியம்மாள் ஆகியோர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இதில் போலீஸ் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும், சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது. அடுத்த வழக்கு விசாரணையை வருகிற மே 1ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.