கள்ளக்காதலை கண்டித்த மனைவிக்கு அடி உதை: வீடியோவைப் பாருங்க

புதன், 2 செப்டம்பர் 2015 (14:33 IST)
கள்ள காதலியுடன் இருந்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவிக்கும் அவரது கணவனுக்கும் ஏற்பட்ட சண்டை குறித்த வீடியோ இப்போது சமூக வலைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், கோவா விமான நிலையத்தில் கள்ள காதலியுடன் இருக்கும் தனது கணவரிடம், மனைவி வாக்கு வாதம் செய்கிறார். அவரது கணவர் பொறுமையாக பதில் சொல்கிறார். பின்னர், பேசிக்கொண்டிருக்கும் போதே அருகில் இருக்கும் கணவரின் காதலியை பளார் என கண்ணத்தில் அறைகிறார்.இதனால் கோபமடைந்த கணவன் மனைவியை எட்டி உதைக்கிறார். உடனே அருகில் இருந்தவர்கள், ஒடி வந்து இருவரையும் சமாதனம் செய்கின்றனர். மனைவி கோபம் தீராமல் கத்திக் கொண்டே இருக்கிறார். இதை, அருகில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து தனது பேஸ்புக்கில் போட்டு விட்டார்.   

இந்த வீடியோ, இப்போது வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைய தளங்களில் வைரசாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்