முன்னதாக, பெங்களூரின் விப்ஜியார் மேல்நிலைப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயதுச் சிறுமியை பள்ளியில் பணிபுரியும் அடையாளம் தெரியாத நபர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது, ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பு நிலவியது.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசின், பள்ளிக் கல்வித் துறையின் தலைமைச் செயலர் இந்தச் சம்பவம் குறித்து, கர்நாடக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று தலைமைச் செயலரிடம் விசாரித்தார்.