உயிரிழந்த குதிரை சக்திமானுக்கு சிலை

திங்கள், 11 ஜூலை 2016 (09:19 IST)
சமீபத்தில் பாஜக எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷியால் தாக்கப்பட்டு பின்னர் இறந்த போன காவல்துறை குதிரையான சக்திமானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக டேராடூனில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.


 
 
உத்தரகாண்ட் மழை வெள்ளத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டு பலரை காப்பாற்றியது குதிரை சக்திமான். இந்நிலையில் பாஜக சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது கட்டையால் குதிரையின் காலை தாக்கினார் எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி. இதில் கால் முறிந்து படுகாயம் அடைந்த குதிரைக்கு சிகிச்சை அளித்து செயற்கை கால் பொறுத்தினர் அமெரிக்க மருத்துவர்கள்.
 
இதனையடுத்து குதிரை சக்திமான் சில நாட்களில் உயிரிழந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் மேனகா காந்தி குதிரையை தாக்கியவருக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். இந்நிலையில் குதிரை சக்திமானுக்கு அரசு சார்பில் டேராடூனில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்