’கொடுமை’ - கடனை திரும்ப கேட்டவரின் தலை துண்டிப்பு

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (11:57 IST)
கர்நாடக மாநிலம், பெங்களூர் தேவனஹள்ளி, விஷ்வநாபுராவை சேர்ந்தவர் சசிகுமார்.


 


இவர், மஞ்சுநாத் என்பவரிடம் ரூ 27 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். நீண்ட நாட்களாகியும், அந்த கடனை அவர் திரும்ப தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், குறித்த நேரத்தில் பணத்தை திருப்பி தராததால், கொடுத்த கடனை உடனடியாக திருப்பி தருமாறு சசிகுமாருக்கு மஞ்சுநாத் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது, சசிகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால், சசிகுமார், மஞ்சுநாத்தை கத்தியால் குத்தி கொலை செய்து அவரது தலையை துண்டித்து எடுத்தார். இதை அடுத்து, மஞ்சுநாத்தின்,  தலையுடன் காவல்நிலையத்திற்கு சென்று அவர் சரணடைந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்