அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா: ஒருவர் கைது

திங்கள், 26 அக்டோபர் 2015 (14:11 IST)
டெல்லி ராஜீவ்காந்தி புற்றுநோய் மருத்துவமனையில் செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் கேமராவை ஒளித்து வைத்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி புற்றுநோய் மருத்துவமனையில் செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் கடந்தவாரம் ரகசிய கேமரா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.  இது குறித்து தகவலறிந்த உயரதிகாரிகள் கேமராவை அங்கிருந்து அகற்றினர். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் அதே மருத்துவமனையில் வேலை பார்த்துவரும் ஹரியானாவைச் சேர்ந்த சந்தீப் சர்மா என்ற ஊழியர்தான் கேமராவை வைத்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சந்தீப் சர்மாவைக் கைது செய்த போலீசார், அவரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் கேமராவை வைத்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்