சென்னையில் சில இடங்களில் மீண்டும் கனமழை

சனி, 5 டிசம்பர் 2015 (11:15 IST)
சென்னையில் தற்போது சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது.


 
 
இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் கனமழை பெய்தது. அதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னையே வெள்ளக் காடாக மாறியது. பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் குடியிருக்கும் வீடுகளில் கூட வெள்ளம் புகுந்தது.
 
இரண்டி நாட்களாக, சென்னையில் கன மழை இல்லை. இதனால் வெள்ளம் வடிய ஆரம்பித்துள்ளது. நேற்று ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்தது. 
 
இந்நிலையில், தற்போது சென்னையின் தாம்பரம்,கிண்டி, வேளச்சேரி,ஆவடி போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்