மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சவுத்ரி, இந்தியாவில் திருமணம் என்பது புனிதமாகக் கருதப்படுவதால், திருமணத்துக்குப் பிறகு கணவன், மனைவிக்கு கொடுக்கும் பாலியல் துன்புறுத்தல்களை கிரிமினல் குற்றமாக மாற்ற சட்ட திருத்தம் மேற்கொள்ள இயலாது என்று எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார்.