ஹஜ் பயணிகளிடம் ரூ.2.68 கோடி ஆட்டையைப் போட்ட நடிகைக்கு காப்பு

வெள்ளி, 9 அக்டோபர் 2015 (22:35 IST)
ஹஜ் பணிகளிடம் ரூ.2.68 கோடி மோசடி செய்த கன்னட நடிகை மரியா சூசைராஜை  போலீசார் கைது செய்தனர்.
 

 
மாடல் அழகியாக இருந்து கன்னட திரை உலகில் அறிமுகமானவர் நடிகை மரியா சூசைராஜ். இவர் மும்பையைச் சேர்ந்த பரோமிதா சக்ரவர்த்தி என்பவருடன் சேர்ந்து குஜராத் மாநிலம் வதோதராவில் டிக்கெட் புக்கிங் ஏஜென்சி ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கி நடத்தி வந்தார். 
 
இந்த ஏஜென்சி மூலம் ஹஜ் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்தனர்.
ஆனால், ஹஜ் பயணிகளுக்குத் தெரியாமல் அவர்களின் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்து, அதன் மூலம் கிடைத்த ரூ.2.68 கோடி பணத்தை நடிகை மரியா சூசைராஜ் சுருட்டியுள்ளார். 
 
இதனால், பாதிகப்பட்டவர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் குஜராத் மாநிலம், வதோதரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இதனால், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க, நடிகை மரியா சுசைராஜ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினார். அவரது கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
 
இதனையடுத்து. நடிகை மரியா சூசைராஜை மைசூரில் வைத்து அகமதாபாத் போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பரோமிதா என்பவர் தலைமறைவாகியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்