இதனை கருத்தில்கொண்டு, நாட்டில் உள்ள 101 நதிகளை மேம்படுத்தும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக, நாடாளுமன்றத்தில் நதிநீர் போக்குவரத்து மசோதா மே 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்.
நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவிற்கு ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் உள்ளது. இதனை போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் முழுமையாக பயன்படுத்தி கொள்ளும் வகையில், தேவையான சாத்தியக் கூறுகளை மிகவும் கவனமாக ஆராய்ந்து வருகிறோம்.