கணினி வசதி உள்ளவர்கள் மற்றும் கணினி வசதி இல்லாதவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க 'கணினிமய இந்தியா' திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. இத்திட்டம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படும். அனைத்துக் கிராமங்களும் பிராட்பாண்ட் சேவை பெற்று, இணைய வசதியுடன் இருப்பதை இத்திட்டம் உறுதி செய்யும். அரசின் சேவைகளை மக்களிடம் எளிதில் சேர்ப்பதோடு, இது அரசு செயல்படுகளின் வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்யும்.
மேலும், அரசு சேவைகளைக் கொண்டு சேர்க்கவும், அரசாட்சி திட்டத்தை அமலாக்கவும் 'ஈ-கிராந்தி' எனும் 'இணைய புரட்சி' அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக ஆரம்ப நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சியை ஊக்குவிக்க தனித் திட்டமும் அதற்காக ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.