இது குறித்து மாணவர் பிரதிநிதி விகாஷ் கூறுகையில், "உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு 100 மணி நேரம் ஆன பின்பும், அரசிடம் இருந்து எந்தவித பதிலும் எங்களுக்கு வரவில்லை. ஊடகங்களின் வழியாக எங்களது போராட்டம் அரசின் கவனதித்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.