இது குறித்து, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றேதீர வேண்டும்.
எனவே, ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் தமிழக அரசியல் இயக்கங்கள் ஓரணியில் திரள வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்ற தமிழர்களின் உணர்வை பிரதமர் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.