மருத்துவப் பரிசோதனையில் கூறப்பட்டுள்ள தகவல்களை வைத்து, சிறுமியிடம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய குற்றவாளியை அடையாளம் காண, உறுதிபடுத்த சில கேள்விகள் கேட்க்கப்பட்டது.
ஆனால், சிறுமிக்கு மன அழுத்தம் அதிகமாக மயங்கி விழுந்தார். சிறுமி கோர்ட்டுக்கு செல்லும் சில நிமிடங்களுக்கு முன் அவளது தாய் மற்றும் பாட்டி அந்த சிறுமியிடம் வளர்ப்பு தந்தையை காட்டிக்கொடுக்க வேண்டாம், வாக்குமூலத்தை திரும்ப பெற வேண்டும் என வற்புறுத்தியதை நீதிமன்ற ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
சிறுமி எந்த அளவுக்கு மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என மதிப்பிடவும், இந்த குழப்பமான சூழ்நிலையில் இருந்து சிறுமி வெளியே வர சிறப்பு ஆலோசனைகள் வழங்கவும் நீதிபதி உத்தர்விட்டுள்ளார். பின்னர் சிறுமியின் வாக்குமூலம் பெறப்படும் என நீதிபதி யாதவ் கூறினார்.