மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது பெண், அவரது காதலருடன் தீஸ்காவ்ன் ஷிவாருக்கு நேற்று முன்தினம் இரவு சென்றிருக்கிறார். அப்போது அவர்களை பார்த்த மூன்று பேர், ஆள்நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் அந்தப்பெண்ணின் காதலரை பிடித்து அடித்துள்ளனர்.
அதோடு விடாமல், அவரின் கண் முன்பு அந்த 3 பேரும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்தப் பெண்ணும், அவரது காதலரும் உதவி கேட்டு அலறியும் யாரும் அங்கு வரவில்லை.