பீகாரின் துணை முதல்வரும், லல்லு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவை(26), திருமணம் செய்ய 44 ஆயிரம் பெண்கள் வாட்ஸ் அப்பில் விருப்பம் தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த எண்ணுக்கு ஏராளமான தகவல்கள் குவிந்துள்ளன. அந்த தகவல்களை அவர் ஆராய்ந்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் 3 ஆயிரம் தகவல்கள் மட்டுமே சாலை பழுது தொடர்பான புகார்களாக இருந்தன. இதர 44 ஆயிரம் தகவல், அவரை திருமணம் செய்து விருப்பம் தெரிவித்து இளம்பெண்களிடம் இருந்து வந்தவையாக இருந்தன. அதிலும், பல பெண்கள் தங்களின் நிறம், உள்ளிட்ட விவரங்களை தெரிவித்திருந்தனர்.
அவர்கள் அனைவரும், அந்த வாட்ஸ்-அப் எண், தேஜஸ்வியின் சொந்த எண் என நினைத்து தங்களின் விருப்பங்களை தெரிவித்துள்ளார்கள் என்று தெரிகிறது.