இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் காவல்துறை வட்டாரம் கூறும்போது, ''சம்பவம் நடந்த பள்ளியில் 77 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 3 பேர் மட்டுமே ஆண்கள். 17 வாகன ஓட்டுநர்களும் 10 அலுவலக உதவியாளர்களும் உள்ளனர்.
அலுவலக உதவியாளர் குன்டண்ணா (45), பள்ளியின் கடைநிலை ஊழியர்கள் 4 பேர், வேன் ஓட்டுநர்கள் 5 பேர் என மொத்தம் 10 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். 3 பேர் மீது சந்தேகம் வலுத்திருக்கிறது'' என்றனர்.