அண்மையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் முதலமைச்சராக இருந்தவர் கலிக்கோ புல். இவர் 6 மாதங்கள் அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் சில வாரங்களுக்கு முன்னர் பதவியில் இருந்து விலகினார் கலிக்கோ புல். இவரது ஆட்சியை உச்ச நீதிமன்றம் சட்டவிரோத ஆட்சி என கூறியிருந்தது.
தூக்கில் தொங்கிய கலிக்கோ புல்லின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான், அவரது மரணம் தூக்கில் தொங்கியதால் நேர்ந்ததா அல்லது வேறு ஏதாவது கரணமா என உறுதியாக தெரியவரும்.