நாக்பூரில் ராணுவ வெடிமருந்து கிடங்கில் நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டதில் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
நாக்பூர் அருகே புல்கானில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 2 அதிகாரிகள் உயிரிழந்தனர்.
தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கணடறியவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.