வறட்சியாலும், கடன் தொல்லையாலும் நாடு முழுவதும், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பல விவசாயிகள் தற்கொலை செய்து கொளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
ஓ.பி.தங்கர் கூறியிருப்பதாவது:-
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் தங்கள் பொறுப்பை மறந்து ஓடுகின்றனர். அவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களை கோழைகள் மற்றும் கிரிமினல்கள் என்று தான் கூறவேண்டும். எனவே அவர்களை பற்றி அரசாங்கம் ஏன் கவலைப்படவேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
ஏழைகளுக்கு நன்மை செய்வதாகக் கூறி பாஜக ஆட்சியை பிடித்தது. ஆனால் வறுமையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளை கிரிமினல்கள் என்று ஒரு அமைச்சர் கூறியிருக்கும் பேச்சு மக்கள் மீது சிறிதும் அக்கறையற்ற, பொருப்பில்லாத பேச்சு என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.