வேளாண் விஞ்ஞானிகள் பயிர் உற்பத்தியை பெருக்குவதற்கான பணியில் ஈடுபட வேண்டும். அதே சமயத்தில் தரமானதாக இருக்க வேண்டும். தரத்தில் சமாதானம் அடையக் கூடாது. வேளாண் விஞ்ஞான ஆய்வுக் கூடங்களில் நடை பெறும் ஆராய்ச்சியும், விஞ்ஞான அறிவும் விவசாயிகளின் நிலங்களுக்கு போய் சேர வேண்டும். விவசாயிகளிடையே வேளாண்மை தகவல்களை பரப்புவதற்கு வேளாண் பல்கலைக்கழகங்கள் சார்பில் தனியாக ரேடியோ நிலையங்கள் தொடங்க வேண்டும்.