மும்பை மேற்கு புறந்கர் பகுதியில் இளம் பெண்களை வைத்து ஒரு கும்பல் ரகசியமாக விபச்சார தொழில் செய்து வந்துள்ளது. தகவல் அறிந்த காவல் துறையினர் நடத்திய சோதனையில், பெண் ஒருவர் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவது தெரிவந்தது.
இதையடுத்து நேற்று காவல் துறையினர் பிரபல மாடல் அழகியான ரேகா வைஷ்ணவ்(23) என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ரேகா மாடலிங் துறையில் நுழைய விரும்பும் இளம் பெண்களை மயக்கி நிர்வாணப் படம் எடுத்து அதை வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி அவர்களை விபச்சாரத்தில் ஈடுப்படுத்தியது தெரியவந்தது.