பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிடையே வார்த்தைப் போர் மூண்டுள்ள நிலையில், ராஷ்டீரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவ், "நாட்டில் உள்ள கசாப்புக்கடைக்காரர்கள் எல்லாம், நரேந்திர மோடியைப் பார்த்து வெட்கப்படுகின்றனர். மோடியா இந்நாட்டின் பிரதமர் ஆகப் போகிறார் என்று கசாப்புக்கடைக்காரர்கள் திகைத்துள்ளனர்” என்று விமர்சித்துள்ளார்.
முன்னதாக, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 'குஜராத் மாநிலத்தின் கசாப்புக்கடைக்காரர்' என்று திரிணமூல் காங்கிரஸும், மம்தா பானர்ஜியின் ஓவியம் தொடர்பாக பாஜகவும், ஒருவரை ஒருவர் தாக்கி பேசியது குறிப்பிடத்தக்கது.