கருப்பு பணத்தை மீட்கவும், கள்ள பணத்தை தடுக்கவும் மோடி அரசு எடுத்திருக்கும் துணிச்சலான நடவடிக்கை என பலரும் பாராட்டினாலும் பொது மக்கள் மத்தியில் இது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்றாட செலவுக்கு என்ன செய்ய போகிறோம் என தெரியாமல் இருக்கிறார்கள்.
அவர்கள் கூறும் காரணம் தங்களின் அன்றாட வாழ்க்கை இதனால் குழம்புகிறது. கருப்பு பணம் வைத்திருப்பது ஒரு சிலரே ஆனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள். கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் ஒரு சிலர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அரசு சாதாரண மக்கள் மீது பொருளாதார யுத்தத்தை நடத்துவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்து வருகிறது.