வடகிழக்கு இந்தியாவில் இன்று 4.0 அளவில் லேசான நிலநடுக்கம்

சனி, 15 ஆகஸ்ட் 2015 (18:39 IST)
வடகிழக்கு இந்தியாவில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆக பதிவானது.
 
சிக்கிம் மாநிலத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது. காலை 11.12 நிமிடம் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த வித உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்