நிலநடுக்கத்தால் வட மாநிலங்களில் 5 பேர் உயிரிழப்பு

சனி, 25 ஏப்ரல் 2015 (16:12 IST)
நில நடுக்கததிற்கு உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இன்று முற்பகல் 11,46 மணியளவில் நேபாளத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி, சிக்கிம், லக்னோ, கொல்கத்தா உள்பட வட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
 
அத்துடன், ஜெய்பூர், ராஞ்சி, கவுகாத்தி, பாட்னா, ஒடிசா, பீகார், உத்தர பிரதேசம் ஆகிய வடமாநிலங்களிம் ஏற்படது.
 
இந்த நிலநடுக்கத்தால் உத்தர பிரதேசத்தில் 2 பேரும், பீகார் மா நிலத்தில் 3 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்