மணிப்பூரை மையமாக கொண்டு இந்தியா - மியான்மர் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரின் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருந்ததாகவும் தெரிகிறது. மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுளளது. இதனால் மணிப்பூரில் இருக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், மணிப்பூர் முதலமைச்சரை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நிலைமை குறித்து கேட்டறிந்துள்ளார்.