மீரட் மாவட்டத்தில் வசித்து வந்த இன்த்ரேஷ் பரஷர் என்னும் 42 வயது மருத்துவரின் மகளை அவரது வீட்டின் அருகே வசித்து வந்த நிஷு, ராகுல் மற்றும் மான்யன்க் ஆகிய சகோதரர்கள் அடிக்கடி தொந்தரவு செய்துவந்ததாக தெரிகிறது.
இதை குறித்து அப்பெண் தந்தை இன்த்ரேஷிடம் புகார் அளித்ததை அடுத்து அவர், அந்த இளைஞர்களின் தந்தையிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த இளைஞர்கள் மருத்துவர் இன்த்ரேஷ் மருத்துவமனையில் இருந்து திரும்பிய போது, அவரை இரும்பி கம்பி, பைப்புகள் போன்றவற்றால் கடுமையாக தாக்கினர். தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓடிய அவரை மீண்டும் தாக்கியுள்ளனர்