மேலும், ஜல்லிகட்டு நடத்தப்படுவதற்காக அரசாணை வெளியிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டது என்றும் கடைசி நேரத்தில் உச்சநீதிமன்றம் விதித்த தடை காரணமாக தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனது என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் பாஜக கட்சியில் இருந்து தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் நடைபெற இருக்கிற சட்டமன்றத்தேர்தல் குறித்து தமிழக பாஜக தலைவர்களுடன் இன்னும் இரண்டு நாட்களில் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்