கொரோனாவை அடுத்து டெங்கு: டெல்லியில் ஒரே மாதத்தில் 5600 பேருக்கு பாதிப்பு

திங்கள், 22 நவம்பர் 2021 (20:03 IST)
டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் தற்போது டெங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
 
நவம்பர் மாதத்தில் மட்டும் 5600 பேருக்கு டெங்கு காய்ச்சலை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 7100 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
டெங்கு காய்ச்சலால் கடந்த 2015க்கு பிறகு இந்த ஆண்டுதான் டெல்லியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1750 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த டெல்லி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்