நண்பரின் படுக்கை அறையில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவி : டெல்லியில் அதிர்ச்சி

ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (19:30 IST)
டெல்லி பல்கலைக் கழக மாணவியின் பிணம், அவருடைய ஆண் நண்பரின் படுக்கையறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
டெல்லி பல்கலைக் கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி அர்ஜூ சிங்(23). அவர் நவீன் காத்ரி என்ற ஆண் நண்பர் உண்டு.
 
அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பி, தங்களது பெற்றோர்களிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும், அவர்கள் இருவரும் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால் திடீரென அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
 
இந்நிலையில், அர்ஜீ சிங் கடந்த 2ஆம் தேதி திடீரென காணமல் போனார். இதுபற்றி அவரது பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தார்கள். போலிசாரின் விசாரணையில், 2ஆம் தேதி வகுப்புகள் முடிந்ததும், அர்ஜீ சிங் அவரது நண்பர் நவீன் காத்ரியுடன் செல்வதை பார்த்ததாக மற்ற நண்பர்கள் போலிசாரிடம் கூறியுள்ளனர்.
 
விசாரணையில், நவீன் காத்ரி வேறு ஒரு பெண்ணை கடந்த நான்காம் தேதி திருமணம் செய்ய இருந்த நிலையில், எங்கே அர்ஜீ சிங், தனது கல்யாணத்திற்கு தடையாக இருப்பாரோ? என்ற பயத்தில் நவீன் அவரை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அர்ஜீசிங்கின் பிணம், நவீனின் படுக்கையறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

அர்ஜீ சிங்கை கொன்று தனது படுக்கையறையில் மறைத்து வைத்திருந்ததாக நவீன் போலீஸ் விசாரணையில் ஒத்துக் கொண்டார்.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
 
இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்