உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிப்படிப்புகளை முடித்துவிட்டு கல்லூரிகளில் சேர்ந்து படித்து பட்டதாரிகளாக விரும்பும் மாணவ மாணவிகளுக்கு டெல்லி மாநில அரசு ரூ.10 லட்சம் வரையிலான கல்விக்கடன்களை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்திற்கு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.