இந்நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டு முகேஷ் சிங், “பெண்கள் வீட்டு வேலைகள், வீடுகளை பராமரிக்கும் வேலைகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் இரவு நேரங்களில் டிஸ்கோ கிளப்புகளை சுற்றுவது, இரவு நேரங்களில் பார்களுக்கு போவது, தவறான உடைகளை அணிவது போன்றவற்றை செய்யக்கூடாது” என்று கூறியிருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் அளித்த பேட்டியை பார்த்து எனக்கு கோபம்தான் வருகிறது. ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் பேட்டி அளித்துள்ள அவருக்கு மூளையில் ஏதோ பாதிப்பு இருக்க வேண்டும்.
நல்லபடியாக உள்ள யாரும் இப்படி செய்யவும் மாட்டார்கள், பேசவும் மாட்டார்கள். ஈவு இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ள அந்த நபர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை நினைக்கையில் கோபம் வருகிறது” என்று கூறியுள்ளார்.